இந்த இணைய தள முயற்சியை எனக்கு சாத்தியப்படுத்திய நண்பர்கள்
த.அருளாளன்
கரு.அண்ணாமலை
ராஜாராம்
மற்றும்
பர்ப்பிள் ரெயின் சொல்யூஷன்ஸ் நண்பர்கள்
பிரபாகரன்
மயிலை மணி
அனைவருக்கும் என் நன்றி
ஞாநி
--
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம் உண்மைகள் சொல்வோம் - பல வண்மைகள் செய்வோம்
This is the site of Gnani tamil writer, journalist, theatre person, film maker.
(From November 29,2008, Gnani writes an article in English occasionally on current affairs.) now available to read: HOW TO FIGHT SENA'S THREAT TO KHAN'S FILM ? : APPEAL TO AMITABH
How to stop terrorism : appeal to Advani Hotel Taj : icon of whose India ? (this article is now part of an anthology edited by Ram Punwani published by Sage books)
டீன் ஏஜ் முதல் ஓல்ட் ஏஜ் வரை
அனைவருக்குமான வாழ்க்கை வழிகாட்டி நூல்
ஞானபாநு பதிப்பகத்தின்
‘என் வாழ்க்கை என் கையில்’
பத்து வாழ்க்கைத் திறன்கள் பற்றிய அறிமுக நூல்
நூலாசிரியர்கள் ஞாநி ஏ.எஸ்.பத்‘மா’வதி
தொடர்புக்கு: 9444024947
---------------------------------------------------- ஓ பக்கங்கள் நித்யானந்தா வீடியோ விவகாரம்
அடுத்த கூட்டம்: மார்ச் 14 ஞாயிறு மாலை 3.30 மணி பேச்சாளர் : எழுத்தாளர் நாஞ்சில் நாடன்
இடம்: 39 அழகிரிசாமி சாலை
கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 78
கிணற்றடியினைநண்பர்கள்சந்தித்துபேசும்வெளியாகபயன்படுத்தலாமேஎன்றஎண்ணத்தில்கேணிஎன்றஇலக்கியசந்திப்புஅமைப்பைநானும் நண்பர் எழுத்தாளர் பாஸ்கர் சக்தியுமாக உருவாக்கியுள்ளோம். இதுவரை :
2009: ஜூன் 14: எஸ்.ராமகிருஷ்ணன் ஜூலை 12 பிரபஞ்சன் ஆகஸ்ட் 13:பாலு மகேந்திரா செப்டம்பர் 13: மகேந்திரன் அக்டோபர் 11: கி.ராஜநாராயணன். நவம்பர் 8:அசோகமித்திரன். டிசம்பர் 13: திலீப்குமார்.
2010: ஜனவரி 10: கவிஞர் சுகுமாரன். பிப்ரவரி 14: ஜெயமோகன்
நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா?அதற்காகவே கோலம் வீடு தேடி வரும் பட இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம்.
கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.
நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். ஆயிரம் பேரிடமிருந்து பணம் வந்ததும் படப்பிடிப்பைத் தொடங்குவோம். அடுத்த இரு மாதங்களுக்குள் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.
இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்பாளியுமபார்வையாளருமநேரடியாக உறவு கொள்ளுமஇயக்கமே கோலம். எண்ணற்ற புள்ளிகளாக பார்வையாளர்கள்இருக்கிறார்கள். இந்தப்புள்ளிகளை இணைத்து ஒரு கோலம்வரையும்படைப்பாளிகளின் அமைப்பு கோலம்.
இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே அடுத்த 24 மணி நேரத்துக்குள் உங்கள் முன்பதிவுத் தொகை எமக்கு வந்து எம்மை பிரமிக்கச் செய்யட்டும். ஊர் கூடி தேர் இழுப்போம்.
முன்பதிவுத் தொகை:இந்தியாவுக்குள்:ரூ500.வெளிநாடுகள்: 15 அமெரிக்க டாலர். கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078. செல்பேசி: 9444024947. மின்னஞ்சல்:நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலைபேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.
வணக்கம். இது என் கருத்துக்களை உங்களுடன் பகிர்வதற்கான இடம். பொது வெளியில் முழு நேர கருத்தாளனாகக் கடந்த 34 வருடங்களாக இயங்கி வரும் என் கருத்துக்களை, இதுவரை எழுதியவற்றை, இனி எழுதுபவற்றை, வெவ்வேறு செயல்பாடுகளின் பதிவுகள் எல்லாவற்றையும் ஒரு கூரையின் கீழ் மெல்ல மெல்லக் கொண்டு வர வேண்டும் என்று என் இளம் நண்பர்கள் விரும்புவதால் இங்கே வந்திருக்கிறேன்.
பத்திரிக்கை, நாடகம், சின்னத்திரை, பெரிய திரை, பயிலரங்கங்கள் என்று பல்வேறு தளங்களில் செயல் பட்டு வருகிறேன். மனித வாழ்வைத் தொடும் அனைத்தின் மீதும் எனக்கு உள்ள அக்கறையே, பல தடைகளையும் மீறி என்னைத் தொடர்ந்து இயங்க வைக்கிறது.
என் பார்வைகளை உங்கள் முன் வைப்பது என் உரிமை. அவற்றை நீங்கள் ஏற்பதும் நிராகரிப்பதும் உங்கள் உரிமை. ஏற்பு குறித்த மகிழ்ச்சி, நிராகரிப்பு பற்றிய வருத்தம் ஆகிய மன நிலைகளை இப்போது நான் கடந்து விட்டேன். பகிர்தல் மட்டுமே என் இன்றைய மனநிலை. என் இணைய வீட்டுக்கு நீங்கள் வந்திருப்பதற்கு நன்றி.