
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள் சொல்வோம் - பல வண்மைகள் செய்வோம்
An eye for an eye will only make the whole world blind - Mahatma Gandhi

நான் யார் |
பிறந்த ஊர்
4-1-1954ல் நான் பிறந்தது சென்னையிலிருந்து 56 கிலோமீட்டர் அருகில் உள்ள செங்கற்பட்டில் ஒரு சிறிய அரசு மருத்துவமனையில்.
பெற்றோர்
அப்பா வேம்புசாமி சென்னையில் ஆங்கிலப் பத்திரிகையாளராகப் பணியாற்றியவர் (1907-1997). என் அம்மா பங்காரு அப்பாவின் துணைவி. அப்பாவின் மனைவி ஜெயலட்சுமி, அவரது குழந்தைகளான என் மூன்று அண்ணன்கள், ஓர் அக்கா, ஒரு தங்கை, என் அம்மாவின் அக்காவும் விதவையுமான கனகவல்லி அனைவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்தோம். அப்போதைய என் பெயர் சங்கரன். வீட்டில் நிலவிய ஜனநாயகத் தன்மையும், வறுமையில் செம்மையும், அப்பாவின் நேரு சோஷலிச அரசியல் பார்வையும் என்னை உருவாக்கிய ஆரம்ப அடிப்படை அம்சங்கள். திருத்தமுடியாத பெரும் குடிகாரராக முழு குடும்பத்தையும் துயரத்திலும் சிக்கல்களிலும் தொடர்ந்து ஆழ்த்திய என் தாய் மாமா டிரைவர் பாபு, தெருவில் புலிவேஷம் ஆடியதும் சிலம்பம் சுழற்றியதும் எனக்கு சாதி, வர்க்க முரண்பாடுகள் பற்றிய ஆரம்பப் பாடங்களாக இருந்தன.
படிப்பு
செங்கற்பட்டு புனித சூசையப்பர் பள்ளியில் பதினோராவது வரை படித்த சூழல் என்னை பேச்சு, எழுத்து, நடிப்பு துறைகளில் ஈடுபடுத்தியது. அவற்றை மேலும் வளர்த்த சூழல் தாம்பரம் சென்னை கிறித்துவக் கல்லூரியில் கிட்டியது. கல்லூரியில் தமிழ்ப்பேரவை செயலாளனாக இருந்தபோது 1971 தேர்தலில் காமராஜ்-ராஜாஜி-சோ கூட்டணியை எதிர்த்து இந்திரா காந்தி- கலைஞர் கருணாநிதியின் அணிக்கு ஆதரவாக செங்கற்பட்டு மாவட்டம் முழுவதும் பிரசாரம் செய்தேன். பள்ளியில் ஆண்டு மலர் ஆசிரியர் குழுவில் பணியாற்றியது, கல்லூரியில் படிக்கும்போது வம்பன் கையெழுத்து இதழை நடத்தியது, பூச்செண்டு என்ற மாணவர் இதழில் கட்டுரைக்கு பரிசு பெற்றது போன்ற தொடர் நிகழ்ச்சிகள் என்னை முழு நேர எழுத்தாளனாக வடிவமைத்தன.
முதல் வேலை
ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் படிப்புமுடித்ததும் சென்னை இந்தியன் எக்ஸ்பிரஸ் அலுவலகத்தில் விளம்பரக் கணக்குப் பிரிவில் கடைநிலை உதவியாளனாகப் பத்து மாதம் வேலை செய்தேன் (1973-74). அதிலிருந்து விலகி சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் பட்டயப் படிப்பில் சேர்ந்தேன்.(1974) அதை முடித்துவிட்டு இந்தியன் எக்ஸ்பிரசில் நிருபராக வேலைக்குச் சேர்ந்தேன்(1975).
தனிக் குடித்தனம்
அப்பாவிடமிருந்து பிரிந்து நானும் என் அம்மாவும் பெரியம்மாவும் தனியே சென்னையில் குடியேறினோம்.
நெருக்கடி நிலை காலம் முழுக்க இந்தியன் எக்ஸ்பிரஸ் அதை எதிர்த்தபோது, அதன் நிருபராக நானும் எதிர்ப்புப் பணியில் ஈடுபட்டேன். இதே காலகட்டத்தில் விகடன், கல்கி, தினமணி கதிர், கணையாழி, விசிட்டர், விசிட்டர் லென்ஸ், அமுதசுரபி ஆகிய இதழ்களில் கதைகளும் கட்டுரைகளும் எழுதுபவனாக அறிமுகமாகிவிட்டேன்.
தொழிற்சங்க முயற்சிகளில் ஈடுபட்டதால் 1980 ஜனவரியில் நிர்வாகம் என்னை வேலையிலிருந்து நீக்கியது. அதை எதிர்த்து வழக்கு தொடுத்தேன். இடைக்காலத்தில் தினகரன் நடத்திய இண்டியன் சன் ஆங்கில ஏட்டில் ஒரு மாதம், எழுத்தாளர் இந்துமதி ஆசிரியராக இருந்த அஸ்வினி இதழில் சில மாதங்கள், ஆற்காடு வீராசாமி நடத்திய எதிரொலி தினசரியில் சில மாதங்கள், இடையிடையே வேலையின்மை என்பதாக 1982 வரை வாழ்க்கை சென்றது. 1982ல் தீம்தரிகிட இதழை நண்பர்களுடன் சேர்ந்து தொடங்கினேன். முப்பதாயிரம் பிரதிகள் வரை விற்றபோதும் முகவர்கள் ஏமாற்றியதால் மூன்று இதழுடன் நின்று போயிற்று. மீண்டும் எதிரொலியில் பணி. மீண்டும் வேலையின்மை. இந்த ஆண்டுகளில் கடும் பொருளாதார நெருக்கடியின் வலிகளைப் பெரிதும் சுமந்தவர் என் அம்மா பங்காரு.
நாடகம்
இதே ஆண்டுகளில்தான் இன்னொரு பக்கம் நாடக முயற்சிகளில் ஊக்கத்துடன் ஈடுபட்டேன். 1976-77ல் கூத்துப்பட்டறையில் இருந்தேன். 1978ல் வீதி தெரு நாடக இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவனாகச் செயல்பட்டேன். பரீக்ஷா குழுவை நண்பர்களுடன் தொடங்கினேன். 1980ல் உருவான இலக்கு கலாசார இயக்கத்தில் ஈடுபட்டேன். இலக்கு சென்னையில் நடத்திய எம்.ஜி.ஆர் ஆட்சியின் உலகத் தமிழ் மாநாட்டு ஊதாரித்தனத்துக்கு எதிரான கண்டனக் கூட்டத்தை ஏற்பாடு செய்தேன். 1978லும் 1985லும் சென்னை நிருபர்கள் சங்கத்தின் செயலாளராக இரு முறை பொறுப்பில் இருந்தேன். 1983ல் ஜூனியர் விகடன் தொடங்கியதும், அதற்கு எழுத ஆரம்பித்தேன். வாரக் கூலி அடிப்படையில் பிறகு வேலைக்கு சேர்ந்தேன்.
மரணம் மணம் மண முறிவு
ஆகஸ்ட் 14 அன்று என் அம்மா தன் 56வது வயதில் இறந்தார். ஏற்கனவே சுமார் இரு வருடங்களாகக் காதலித்து வந்த நானும் எழுத்தாளர்-பத்திரிகையாளர் பத்மாவும், அம்மா இறந்து 24 நாட்கள் கழித்து செப்டம்பர் 7

அன்று திருமணம் செய்து கொண்டோம். கணவன் மனைவியாக வாழப் போவதாக பரீக்ஷா நாடக நிகழ்ச்சி மேடையில் அறிவித்து மாலை மாற்றிக் கொண்டதே திருமண நிகழ்ச்சியாகும்.பின்னாளில் கணவன் மனைவி உறவில் சிக்கல் வந்தாலும் கூட எங்கள் நட்பு முறியக்கூடாது என்று காதலித்த காலத்திலேயே உறுதியாக நினைத்தோம். பத்தாண்டுகள் கழித்து கணவன் மனைவி உறவில் சிக்கல் வந்தபோது அதனை முறித்துக் கொண்டு நண்பர்களாக நீடிக்க முடிவு செய்தோம்.மகன் வளர்வதற்காக ஐந்தாண்டுகள் காத்திருந்து 1998ல் செயல்படுத்தினோம். 2002ல் பத்மாவின் கட்டுரைகள் பெண்மொழி என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டபோது, அந்த நிகழ்ச்சியில் எங்கள் மண முறிவையும் அறிவித்தேன். எங்கள் ஒரே மகன் மனுஷ் நந்தன் சென்னை அரசு திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு படித்துவிட்டு தற்போது மும்பையில் உதவி ஒளிப்பதிவாளனாகப் பணியாற்றுகிறான்.
1984 மார்ச்சில் இந்தியன் எக்ஸ்பிரசுக்கு எதிரான என் வழக்கில் தீர்ப்பு வந்தது. என்னை நிர்வாகம் வேலை நீக்கம் செய்தது தவறு என்று தீர்ப்பாயிற்று. கோர்ட் உத்தரவின்படி மீண்டும் எக்ஸ்பிரசில் வேலைக்கு அமர்த்தப்பட்டேன். சுமார் பத்து மாதங்கள் கழித்து 1985ல் வேலையிலிருந்து விலகினேன். பணி இழப்புக் காலத்துக்கான ஊதியமாகக் கிடைத்திருந்த தொகையில் கடன்கள் போக எஞ்சியதைக் கொண்டு மறுபடியும் தீம்தரிகிட தொடங்கினேன். இந்த முறையும் முப்பதாயிரம் பிரதிகள் விற்றும் இந்த முறையும் முகவர்கள் ஏமாற்றியதால் ஏழு இதழ்களுடன் தீம்தரிகிட நின்று போயிற்று.
எங்கேயும் முழு நேர நிரந்தரப் பணி இல்லாமல், தற்காலிகமாக சில மாதங்கள் ஒப்பந்த ஊதியத்திலோ, எழுதினால் காசு என்ற அடிப்படையிலோ அடுத்த ஏழாண்டுகள் சென்றன. இடையில் 1986ல் சென்னை நகரத்துக்கான இதழாக ஏழு நாட்கள் என்ற இதழைத் தொடங்கி இரண்டே இதழ்களில் மூடவேண்டி வந்தது. சென்னைப் புத்தக் கண்காட்சியில் தனி அரங்கு வைத்த முதல் தமிழ் இதழ் என்ற பெயர் மட்டும் இதற்குக் கிட்டியது.
எழுத்தில் அரசியல் விமர்சகனாகவும் பல இடது சாரி அமைப்புகளின் மேடைகளில் விமர்சனப் பேச்சாளனாகவும் இது வரை இருந்த நான் நேரடி அரசியல் களப் பணியில் 1987ல் ஈடுபட்டேன். பேராசிரியர் சாலை இளந்திரையன், வி.சி.குகநாதன், மு.மேத்தா, சுப.வீரபாண்டியன் ஆகியோருடன் ஈழத்தமிழர் உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினராக செயல்பட்டேன். ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தைக் கண்டித்தும் இந்திய அமைதிப் படையைத் திரும்பப் பெறக் கோரியும் மனிதச் சங்கிலிப் போராட்டத்தை நடத்தினோம்.
ராஜீவ் அரசின் போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழலை எதிர்த்து மறைமலை நகர் காங்கிரஸ் மாநாட்டு சமயத்தில் சிறப்பு கிண்டல் மலர் வெளியிட்டேன். அதையொட்டி முரசொலியில் ஞாயிறு தோறும் புதையல் என்ற ராஜீவ் காங்கிரஸ் எதிர்ப்பு இணைப்பை வாரக் கூலி அடிப்படையில் தயாரித்துத் தரும் பணியில் ஈடுபட்டேன். ராஜீவை எதிர்த்து வி.பி.சிங் ஜன் மோர்ச்சாவை தொடங்கியதும் தமிழகத்தில் அதன் தொடக்க விழாவில் அவர் பேச்சை மொழிபெயர்த்தேன். பிறகு தி.மு.கவும் வி.பி.சிங்கின் ஜனதா தளமும் சேர்ந்து தேசிய முன்னணியை உருவாக்கியபோதும் மேடையில் தலைவர்களின் உரைகளை மொழிபெயர்ப்பவனாகச் செயல்பட்டேன். தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.முகவை ஆதரித்து வி.பி.சிங் தமிழகமெங்கும் பேசிய எல்லா பிரசாரக் கூட்டங்களிலும் அவரை மொழிபெயர்த்தேன். தேர்தலில் தி.மு.க வென்று ஆட்சி அமைத்ததும், முரசொலி புதையல் பணியிலிருந்து விலகிக் கொண்டேன்.
பின்னர் வி.பி.சிங் பிரதமரானதும் மண்டல் கமிஷன் பரிந்துரைகள் செயல் படுத்தப்பட்டன. அப்போது மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஆதரித்து விளக்கும் சிறு நூலை நானும் நண்பர் வழக்கறிஞர் சந்துருவுமாக எழுதி வெளியிட்டோம். பல கூட்டங்களிலும் இருவரும் பேசினோம். 1989 தேர்தலின்போது வி.பி.சிங்கையும் ஜனதா தளத்தையும் ஆதரித்து ஜனதா தள தேர்தல் பிரசாரத்துக்கான வீடியோ கேசட்டை தயாரித்து வெளியிட்டேன். இந்த கேசட், மத நல்லிணக்கத்தையும் மண்டல் கமிஷனையும் விளக்குவதாக அமைக்கப்பட்டது.
1988 இறுதியில் எழுத்து, பேச்சு, நாடகப் பணிகள் தவிர வீடியோ துறையிலும் ஈடுபடத் தொடங்கியிருந்தேன். மதுரை சோகோ தொண்டு நிறுவனத்துக்காக 1988 இறுதியில் மகளிர் நிலை பற்றிய கதைப் படமாக 48.2% என்ற தலைப்பிலான 28 நிமிடப்படத்தை எழுதி இயக்கினேன். இதுவே என் முதல் குறும்படம். பின்னர் சென்னை தொலைக்காட்சியின் இரண்டாம் அலைவரிசையின் முதல் தொடராக நண்பர் எழுத்தாளர் அறந்தை நாராயணனின் நாவலான வாரந்தோறும் வயசாகிறது நாவலை விண்ணிலிருந்து மண்ணுக்கு என்ற பெயரில் எழுதி இயக்கித் தயாரித்தேன். இதுவே என் முதல் டி.வி. தொடர். இதையடுத்து குடந்தையைச் சேர்ந்த நடையழகன் தன் நண்பர்களுடன் சேர்ந்து, என்னை ஆசிரியராகக் கொண்டு அலைகள் என்ற இதழை 1989ல் சில மாதங்கள் நடத்தினார். 1991ல் விகடன் நிறுவனத்தின் ஜூனியர் போஸ்ட் இதழின் பொறுப்பாசிரியர் பதவியை ஏற்க அழைக்கப்பட்டேன். 1992 டிசம்பர் வரை அதில் பணியாற்றினேன்.
அடுத்த நான்கு ஆண்டுகள் சுயேச்சையாக இதழ்களுக்கு கட்டுரைகள் எழுதுவதிலும், டி.வி தொடர்கள் தயாரிப்பதிலும், எம்.எஸ்.சுவாமிநாதன் நிறுவனத்திற்காக சில ஆவணப்படங்கள் இயக்குவதிலுமாகச் சென்றன. எழுபதுகளிலிருந்தே வானொலி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் தயாரிப்பதையும் செய்து வந்த நான் 1994ல் முதல்முறையாக பண்பலை ஒலிபரப்பு தொடங்கி தனியாருக்கு உரிமம் தந்தபோது, அதில் வாரந்தோறும் திங்கள் காலையில் பாடல்களுடன் வித்யாசமான தகவல்களையும் சேர்த்துச் சொல்லும் முத்துக் குவியல் பகுதியை அறிமுகப்படுத்தி நிகழ்ச்சித் தொகுப்பாளனாக இருந்தேன். இதே வருடம் என்னுடைய டி.வி நிகழ்ச்சியில் குழந்தைகளுக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் பகுதியையும் அதையொட்டி அன்றைய தினம் பிறந்த சிந்தனையாளர்கள், விஞ்ஞானிகள், தலைவர்கள், கலைஞர்கள் பற்றிய தகவல்களைச் சேர்த்துச் சொல்லும் பகுதியை தமிழகத் தொலைக்காட்சியில் அறிமுகப்படுத்தினேன். தினகரன் குமரனின் ஆர்வத்தினால் தொலைக்காட்சித் துறைக்கென்றே ஒரு பிரத்யேக இதழை உருவாக்கும் ஆசிரியர் பொறுப்பை 1994ல் மேற்கொண்டேன். டி.வி.உலகம் என்ற இந்த இதழ் சுமார் ஓராண்டு வெற்றிகரமாக வெளிவந்தும் தினகரன் நிர்வாகத்துக்குள் இருந்த உள்முரண்பாட்டினால் நிறுத்தப்பட்டது. பதினாறு வருடங்களுக்கு முன்னால் தன்னிடம் நிருபராக இருந்த என்னை வேலை நீக்கம் செய்த இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம், 1996ல் என்னை அதன் தினமணி ஏட்டின் மேகசின் எடிட்டர் பதவி ஏற்க அழைத்தது. இதைக் காண, வேலையிலிருந்து நீக்கப்பட்டதன் துயரங்களை அனுபவித்த என் அம்மா, என் பெரியம்மா இருவரும் உயிரோடு இருக்கவில்லை. எல்லாவற்றையும் ஒரு வெளிமனிதனாக இருந்து பார்த்துக் கொண்டிருந்தவராக என் அப்பா மட்டுமே அப்போது இருந்தார்.
ஓராண்டு தினமணி பணியில் இருந்தபோது பொங்கல் மலர், மகளிர் மலர், மருத்துவ மலர், மாணவர் மலர், தீபாவளி மலர் முதலிய மலர்களை அறிமுகப்படுத்தினேன்.
மீண்டும் டி.வி தயாரிப்புகள், சுயேச்சையான எழுத்துப் பணி. 1999ல் விகடன் நிறுவனத்தின் சிறுவர் இதழை உருவாக்க அழைக்கப்பட்டேன். சுட்டி விகடனை பெயர் சூட்டி வடிவமைத்து உருவாக்கி நிலை நிறுத்திவிட்டு சில மாதங்களுக்குப் பின் விலகிக் கொண்டேன். கார்ட்டூனிஸ்ட் மதன், முன்னாள் விகடன் பத்திரிகையாளர் ராவ் ஆகியோரால் வழிநடத்தப்பட்டு, இறக்கும் தருவாயில் இருந்த விண் நாயகன் என்ற இதழின் ஆசிரியர் பொறுப்பை சுமார் நூறு நாட்கள் வகித்து அதன் இறுதிச் சடங்குகளைச் செய்தேன்.(2000).
சில புதுக்கவிதைகளைக் கொண்டு வீடியோ காட்சிகள் அடங்கிய கவீ என்ற கவிதை வீடியோவை உருவாக்கியதும் இதே ஆண்டுதான். விண் நாயகன் அனுபவத்துக்குப் பிறகு எந்த இடத்திலும் முழு நேர வேலைக்குச் செல்வது இல்லை என்று முடிவெடுத்தேன். அதன்படி எட்டாண்டுகளாக எங்கேயும் முழு நேர வேலை செய்வதில்லை. சுதந்திரமாகக் கருத்துக்களை வெளியிடுவதற்காக மீண்டும் தீம்தரிகிட இதழை சிறிய அளவில் சந்தாதாரர்களை மட்டும் நம்பி நடத்தும் முயற்சியை 2002ல் தொடங்கினேன். சுமார் ஆயிரம் சந்தாதாரர்கள் ஆதரவு தந்தனர். ஆனால் தயாரிப்புச் செலவு சந்தாவுக்குக் கட்டுப்படியாவதற்கு இன்னொரு 1000 பிரதிகள் வரை உதிரியாக விற்க வேண்டியிருந்தது. மீண்டும் முகவர்கள் ஏமாற்றியதால், 50 இதழகள் வந்த பின் தீம்தரிகிட அச்சில் நிறுத்தப்பட்டது. அதை இணைய இதழாக்க, கீற்று இணைய தள நண்பர்கள் முன்வந்தார்கள். எனினும் என் வேலை பளுவினாலும் இணையத்தில் இதழ் நடத்துவதில் அப்போது ஆர்வமில்லாததாலும் அது சுணங்கியது.
1974லிலிருந்து இன்றளவும் தொழில்முறையிலான என் விருப்பத்துறைகளான பத்திரிகை, டி.வி சார்ந்த வேலைகள் ஒரு புறம் இருக்க, இன்னொரு பக்கம் தொழில் முறையற்ற என் விருப்பத் துறைகளாக நாடகமும், இளைஞர்கள்-குழந்தைகள் ஆகியோருடன் நடத்தும் பயிலரங்குகளும் இருந்து வருகின்றன. தமிழகம் முழுவதும் பல கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் இவற்றை செய்து வந்திருக்கிறேன். இவற்றில் குறிப்பிடத்தக்கவை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 4 ஆண்டுகளில் 400 மாணவர்களுக்கு வீதி நாடகப்பயிற்சி வழங்கியதும், சென்னை மகளிர் கிறித்துவக் கல்லூரி மாணவிகளுடன் இரு முறை நாடகத் தயாரிப்புகளில் ஈடுபட்டதுமாகும்.
1971ல் கல்லூரி மாணவனாக இருந்த நாளிலிருந்தே எனக்கு நிறைய சினிமா ஆர்வம் உடைய நண்பர்கள், சினிமாவில் ஈடுபடும் நண்பர்கள் தொடர்ந்து இருந்துவந்தபோதும், சினிமா தொழிலில் ஈடுபடும் ஆர்வம் எனக்கு வரவே இல்லை. காரணம் சினிமா என்ற மீடியம் அல்ல. அதை நடத்தும் வணிகச் சூழலின் மோசமான விதிகள்தான். நான் செயல்பட்ட எல்லா துறைகளிலும், என் நெறிகளுக்கு உட்பட்டு வராத எந்த செயலிலும் நான் ஈடுபடுவதில்லை என்பதில் எப்போதும் நான் கறாராக இருந்து வந்திருக்கிறேன். வணிக சினிமாவில் அதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு என்பதால் அதில் ஈடுபடவில்லை. 2007ல் என் 54வது வயதில், திரைப்படச் சூழலில் ஏற்பட்டு வரும் சில மாற்றங்களின் விளைவாக, என்னால் வணிக நிறுனமான பிரமிட் சாய்மீரா உதவியுடன் ஒற்றை ரீல் இயக்கம் என்ற முயற்சியைத் தொடங்க முடிந்திருக்கிறது. இது வரை இரு ஒற்றை ரீல்களை இயக்கித் தயாரித்திருக்கிறேன்.
என் எழுத்துப் பணியின் ஆரம்ப வருடங்களில் விசிட்டர், விசிட்டர் லென்ஸ் போன்றவற்றில் ஒரு சில பத்திகள் எழுதியிருந்தபோதும், தொடர்ந்து என்னை ஒரு காலமிஸ்ட்டாகப் பரவலாக அறிமுகப் படுத்தியது தமிழ் இந்தியா டுடே. 2003ல் தொடங்கி இரண்டாண்டுகளுக்கும் மேலாக அதில் வெளியான என் பத்தியின் வீச்சையடுத்து, 2005ல் ஆனந்தவிகடன் காலம் எழுத அழைத்தது. ஓ பக்கங்கள் அதில் வெளிவரத் தொடங்கிய பின்னர், சிறிது காலம் தனிப்பட்ட காரணங்களுக்காக மும்பையில் என் மகனுடன் தங்கிய போது விகடனின் மும்பை பகுதி நேர நிருபராகவும், பின்னர் சென்னை வந்தபின்னர் ஆசிரியர் குழு உறுப்பினர்களின் மனித வள மேம்பாடு தொடர்பான பகுதி நேர ஆலோசகராகவும் பணியாற்றினேன். சுமார் மூன்று வருடங்களாக வெளிவந்த ஓ பக்கங்கள் விமர்சனத் தொடரும், 40 வாரங்கள் வெளியான அறிந்தும் அறியாமலும் இளைஞர் உடல்-உள நலத் தொடரும் அறிவிப்பில்லாமல் நின்ற சூழலில் ஒரே மாலைப்பொழுதில் என் ஆலோசகர் வேலையிலிருந்தும் நீக்கப்பட்டேன்.
இதையடுத்து ஓ பக்கங்கள் குமுதத்துக்கு மாறியிருக்கிறது. என் மதிப்பீடுகள், கருத்துக்கள், வாழ்க்கை தொடர்பான நெறிகள் எவற்றிலும் மாற்றமில்லை. சாதி, மதங்கள் இல்லாத, கடவுள் என்ற கற்பனை தேவையற்ற, ஆண், பெண், மூன்றாம் பாலினர் என அனத்து மனிதரிடையே சமத்துவமும் மனித நேயமும் நிலவும் சமூகத்துக்கான கனவு துளியும் மங்காமல் என்னுள் இருந்துகொண்டே இருக்கிறது. பாரதி, மார்க்ஸ், பெரியார், காந்தி, அம்பேத்கர் என்று என் கனவை உயிருடன் வைத்திருக்கும் சக்திகள் பல. இன்று அரசியலிலும் மீடியாவிலும் கலாசாரத்துறையிலும் இருக்கும் பல பிரபலங்களின் அறிவுக்கூர்மையால் கவரப்பட்டு அவர்களைக் கொன்டாடுவது நடக்கிறதே ஒழிய, அவர்களின் உண்மையான சுயநல முகங்கள் திறமை என்ற ஒப்பனைக்குள் பத்திரமாக ஒளிந்துகொள்கின்றன.
இந்த ஒப்பனைகளைக் கலைப்பதும், முகமூடிகளை நீக்குவதுமே ஒரு எழுத்தாளனின் வேலை. ஒரு பத்திரிகையாளனாகவும் படைப்பாளியாகவும் நான் எப்போதும் இந்த சமூகத்தின் மனசாட்சியாக செயல்படவே முயற்சி செய்து வந்திருக்கிறேன். தனிப்பட்ட முறையில் என்னால் பிறருக்கும் பிறரால் எனக்கும் வலிகளின்றி, ஒரு நேர்மையான, எளிமையான வாழ்க்கையை வாழும் முயற்சியைத் தொடர்ந்து மேற்கொண்டிருக்கிறேன். இதற்கு என்னை தயார் செய்துகொள்ள உதவிய நண்பர்கள், படைப்பாளிகள் பலர். 1975ல் என் அம்மா, பெரியம்மாவுடன் நான் தனிக் குடித்தனம் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை எங்கள் வீடு சக இதயர்களை திறந்த மனதுடன் வரவேற்கும் திறந்த இல்லமாக, எப்படிப்பட்ட பொருளாதார நெருக்கடியிலும் தொய்வின்றி இருந்து வந்திருப்பது எனக்கு என்றென்றும் மகிழ்ச்சி தருவதாகும். இதன் சுமைகளைத் தமதாக்கிக் கொண்டு இதை சாத்தியப்படுத்திய நால்வர் என் அம்மா, என் பெரியம்மா, பத்மா, மனுஷ் ஆகியோர்தான். இந்த முயற்சிகளில் ஒவ்வொரு சிறு தோல்வியும் என்னை மேலும் பக்குவப்படுத்தியிருக்கிறது.
ஒவ்வொரு சிறு வெற்றியும் என்னைத் தொடர்ந்து நம்பிக்கையுடன் இயங்கவைக்கிறது. அப்படிப்பட்ட தொடர்ந்த நம்பிக்கையின் இன்னொரு வெளிப்பாடுதான் இப்போது இணையத்தில் இந்த வாடகை வீட்டில் குடியேறியிருப்பதுமாகும். இதை சாத்தியப்படுத்தியிருக்கும் இளம் நண்பர்கள், அவர்களுடைய தலைமுறை ஆகியவற்றின் உற்சாகம், துடிப்பு ஆகியவை மீதான நம்பிக்கை ஒரு பக்கம். தங்களுடைய தனிப்பட்ட, நேற்று, இன்றுக்கு அப்பால் மொத்த சமூகத்தின் வரலாற்றின் சாரத்தை கிரகித்துக் கொள்ள அவர்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் எனக்கு ஏற்படுத்தும் கவலை இன்னொரு பக்கம். இரண்டோடும் இன்று நான் இங்கே உங்களை வரவேற்கிறேன்.
அன்புடன்
ஞாநி
அக்டோபர் 2008
140 Responses to “நான் யார்”
Leave a Reply
அணு உலை வேண்டாம் என்பதை அரசு மதிக்காததைக் கண்டித்து வாக்காளர் அட்டையை திருப்பித்தரும் போராட்டம்
- இதையும் அரசு அலட்சியப்படுத்தினாலும்,உலக கவனத்தை ஈர்க்க நிச்சயம் செய்யவேண்டும் (100%, 1 Votes)
- இதையும் அரசு அலட்சியப்படுத்தும் என்பதால் செய்வச்தில் பயனில்லை. (0%, 0 Votes)
Total Voters: 1


ஆனந்த விகடனிலிருந்து குமுதத்திற்க்கு மாறிய “ஓ பக்கங்கள்”, பின்பு குமுதத்திலும் நிறுத்தப்பட்டது ஏன்? தற்போது நீங்கள் வெகுஜன பத்திரிக்கைகளில் எழுதுவதில்லையே ஏன்?
ஞாநி பதில்: குமுதத்தில் நிறுத்தப்பட்ட பிறகு அது கல்கியில் தொடர்கிறது. சுமார் இரண்டு வருடங்களாகிவிட்டன. வெகுஜன பத்திரிகைகள் என்னைக் கேட்டால் எழுதுகிறேன். என் நிபந்தனைகளுக்கு உட்பட்டு. அவர்கள் கேட்பதில்லை.
Dear Sir,
May I ask if you are half iyer, like former CM, C.N.Annadurai whose father was iyer mother non-brahmin.
Thx
gnani’s reply: this letter is published only to warn such letter writers.such comments slandering anyone will not be welcome here. such writers willo be reported to cybercrime. i do not believe in caste and i do not accept any caste of birth.
அன்புள்ள ஞாநி,
உங்கள் (மிகச்) சில கருத்துக்களோடு எனக்கு கருத்துவேற்றுமை உண்டு. ஆனால் உங்கள் கருத்துரிமைக்கு நீங்கள் அளிக்கும் மதிப்பு உங்கள் மீதான மதிப்பைக் கூட்டுகிறது.
உங்களிடம் ஒரு மாறான கருத்தை பார்த்தாலும், உங்கள் நேர்மையை சந்தேகிக்க இயலாவண்ணம்,
பிற பத்திரிகையாளர்களிடம் ஏற்படாத ஒரு நம்பிக்கை உணர்வு உங்களிடம் ஏற்படுவதே உங்களை எங்கள் மனதின் அருகில் கொண்டுவந்துள்ளது.
உங்கள் தனிவழியிலேயே நீங்கள் தொடர வாழ்த்துகள்.
நல்லதே நடக்கட்டும்.
மனு.
திரு ஞானி அவர்களுக்கு,
தங்களது சில கருத்துகளை எற்று கொள்ளமுடியவிலை.
——மதங்கள் இல்லாத, கடவுள் என்ற கற்பனை தேவையற்ற——-
கடவுள் இருக்கிறதா இல்லையா என்பது இரண்டாவது பிரச்சனை.ஆனால் ஒருவர் தன் கொள்கையை இன்னொருவர் மேல் தினிககூடாது அது ஆதிகமாக இருந்தாலும் சரி நாத்திகமாக இருந்தாலும் சரி.ஒருவர் யாருக்கும் பிரச்சனை செய்யாமல் இறைவனை வழிபட்டால் தங்களுக்கு என்ன பிரச்சனை.
மதபிரட்சனைகளும் மதகலவரங்களும் முழுக்க முழுக்க அரசியல்.அதற்காக இறைவனே கூடாது என்பது எப்படி சரியாகும்.
எனக்கு கடவுள் மேல் நம்பிக்கை இல்லை.ஆனால் இன்னொருவர் கடவுளை வழிபட்டால் நம்பிக்கை வருகிறது என்றால் நான் எப்படி அதை கெடுக்க முடியும்.
கடவுள் தேவையா இல்லையா என்பதை காலம் தான் பதில் சொல்லும்.
தங்களின் பதிலை எதிர்பார்கிறேன்.
ஒருவன் அவன் தொலிழில் தன்னை மிகைபடுதிகொல்வது (சில சமையம்) எப்படி பார்கிர்கள் ?
என் மதிப்புக்குரிய வணக்கம், ஒரு சிறு சுயசரிதேஎ எழுதிவிட்டிர்கள், படித்ததும் எதோ உணர்வு , லைப் எப்படி எப்படி சமாளிதிர்கள் அதுவும் பிடித்தமான வாழ்க்கை வாழ்வதற்கு. உண்மைதான் பிடித்தமான வாழ்க்கை வாழ்வதற்கு சற்று நிறைஎவே கஷ்டபவேண்டுமோ? நன் உங்கள் ரசிகன் என்று சொல்ல தெரியாது, நான் உங்களை ஒரு கேள்வி கேட்கலாமா ?
திரு ஞானி அவர்களுக்கு, தங்களின் சமிபத்திய கலந்துரையாடலை விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் பார்த்தேன். உண்மையை சொல்ல வேண்டுமானால் எனக்கு தமிழ் / உலக அரசியல் அறிவு கம்மிதான். அந்த நிகழ்ச்சியில் எனக்கு என்ன தோன்றியதோ அதை அப்படியே மிக நாசுக்காக உரைத்தீர்கள். பல நபர்களை பார்க்கையில், உங்களை போன்ற மனிதர்களை நானும் பின்பற்ற வேண்டும் என்பது ஆவா.
நம் மனித சமுதாயதிற்கு என்னாலும் ஏதாவது செய்ய முடியாதா என்று ஏங்கும் என்னை வழி நடத்துவீர்களா?
Die hard fan of Gnani . I salute and hats off you sir.,
ஒ க்கு பின்னாடி இப்படி ஒரு ஓலமா ..நானும் உங்களமாதிரி தான் …இந்த வயசுல உங்க கதையை கேட்ட பின்னாடி நம்ம route மாத்த வேண்டிய காலம் வந்த்ருச்சு ….ரேடியோ பின்னாடி ஓடி இப்ப டிவி வரலாம்னு பார்த்தா
காசுக்கு “ஒ” போடணும் போல இருக்கு ..சரி உங்க period ல வந்த தொழில் சம்பந்தப்பட்ட பத்திரிகைகள் , கம்ப்யூட்டர் பத்திரிகை காரர்கள் தற்போது சந்தையில் கலகுகின்றர்களே…அது அதிர்ஷ்டமா? இல்லை திறமை காரணமா? பதில் சொல்லுங்கள் வலி மாறாக வழி கிடைக்கும் .
மதுரை என். நவசதீஷ் குமார் (9842189345 )
அய்யா ஞானி அவர்களே,
உங்கள் நேர்மையான சிந்தனைக்கும் அதை செயல்படுத்துவதற்கும் என் வாழ்த்துக்கள்.
நேர்மை இப்படி வாழ சிரமமாக இருந்தாலும் அது தரமாக இருக்கும்.
நன்றி,
jaisaa
அன்புள்ள ஞாநி
இன்று தான் இங்கு வந்தேன் . இனி அடிக்கடி வருவேன். மீண்டும் சந்திப்போம் .வாழ்த்துக்கள்.
வேணுகோபால்
மனதில் படும் உண்மைகளை , உலகில் எல்லா மானிட உயிர்களும் உயர்வாக , நலமாக, இன்பமாக இருக்க உண்டான கருத்தைக் கூற, எவ்வளவு துன்பத்தை கடந்து வர வேண்டிஉள்ளது என்பதை உணரும்போது , தமிழ் கூறும் நல்லுலகில் உயர்வான படைப்புகள் ஏன் பெருகவில்லை என்பது புரிகிறது. இவ்வளவு போராட்டங்களுக்கு இடையில் எழுத்துப் பணியை, தரம் தாழ்ந்துவிடாமல் தொடர்ந்து செய்யும் உங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
முத்துக் குவியல், பிறந்த நாள் வாழ்த்து, டி.வி.உலகம், தினமணி மருத்துவ மலர் & மாணவர் மலர், சுட்டி விகடன் – இவையெல்லாம் தங்களால் உருவாக்கப்பட்டவை என்பதை கேள்விப்படும்போது பிரமிப்பாக இருக்கிறது. அதே சமயம்,
“இறக்கும் தருவாயில் இருந்த விண் நாயகன் என்ற இதழின் ஆசிரியர் பொறுப்பை சுமார் நூறு நாட்கள் வகித்து அதன் இறுதிச் சடங்குகளைச் செய்தேன்” என்று சொல்வது வெற்றியில் மார்தட்டும் நீங்கள் தோல்வியில் பங்குபெற தயங்குவதைக் காட்டுகிறது.
எப்படியிருப்பினும், இதழியல் துறையில் தங்களின் பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை. வரலாறு அதை எடுத்துச் சொல்லும். நன்றி.
Anbu gnani,
Tamil samugam very proud about you,
Hats off you,
Salute and regards
Asif d
Malaysia
திரு சுஜாதாவிற்கு பிறகு எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் நீங்கள்தான்.மென்மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
ஒவ்வொரு சிறு தோல்வியும் என்னை மேலும் பக்குவப்படுத்தியிருக்கிறது.
ஒவ்வொரு சிறு வெற்றியும் என்னைத் தொடர்ந்து நம்பிக்கையுடன் இயங்கவைக்கிறது.
அருமையான கருத்துக்கள்.
உங்களது வாழ்க்கை பற்றிய செய்திகளை முழுவதும் படித்தேன். நான் குமுதத்தில் ஒ பக்கங்கள் படித்திருக்கிறேன்.
நீங்கள் இணையத்திற்கு வந்தது மிக்க மகிழ்ச்சி.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
திரு ஞானி அவர்களுக்கு வணக்கம்!
தங்களை மீண்டும் தொடர்பு கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் .அடுத்த மாதம் செப்டம்பர் 15 என்னுடைய திருமணம், தங்கள் முகவரி தெரிந்தால் நானே நேரில் வந்து அழைப்பிதழ் தர
விரும்புகிறேன்.என் திருமணத்திற்கு உங்களை போன்ற ஒரு சில நல்ல உள்ளங்கள் வருவது என் போன்ற இளைஞர்களுக்கு புது உற்சாகம் தரும்.
எதிர்பார்ப்புகளுடன்
உங்கள் தம்பி
கணே.குமரவேல்
ஞாநி பதில்: மின்னஞ்சலில் அழைப்பனுப்பலாஏ. gnanisankaran@hotmail.com
ஹைதராபாத்.
வணக்கம் சார், ஆனந்த விகடன் ஒ பக்கங்கள் மூலம் உங்கள் கட்டுரைகள் படிக்க ஆரம்பித்தேன். அன்று முதல் உங்கள் படைப்புகள் எங்கு கண்ண்டலும் படித்து விடுவேன் . உங்கள் ஸ்பீச் சத் கிடைக்குமா எங்கு கிடைக்கும் .தெரியபடுத்தவும்.நன்றி.
மதிப்பிற்குரிய ஞானி அவர்களுக்கு வணக்கம்.
உங்கள் எழுத்துக்கு அடிமை நான். இதுவரை உங்களின் எழுத்தை படிக்கும் பொழுதெல்லாம் சிலநேரம் இவாறு
சிந்திப்பேன் இவர் கோணம் வேறு மாதிரி உள்ளது என்று அதற்கு இப்பொழுதுதான் விளக்கம் கிடைத்தது, உங்கள் வாழ்கை சரிதையை படித்தவுடன் புரிந்து விட்டது , உங்கள் அனுபவத்துக்கு , நீங்கள் விமர்சிக்க nooru% தகுதி உள்ளவர்தான், வாண்டுமாமா vin வாழ்கை கதையும் இப்படித்தான் உள்ளது, எழுத்தாளர்களுக்கு இது வரம்மா saabamaa..?
பெருமிதமாக உள்ளது. சமூக கோபம் கொண்ட உங்களை போன்ற சிலர் இருப்பது என்னை போன்ற சாமானியனுக்கு தைரியம் தருவதாக உள்ளது.
உங்கள் பணி தொடர இயற்கை துணை புரியட்டும்….
மீண்டும் உங்களை இணையத்தின் வாயிலாக தொடர்பு கொள்ள முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி.
வணக்கம்,
இந்த சமுதாய சாக்கடையில் திமிர் கொண்ட திமிங்கலங்களுக்கு மத்தியில் புழுவாய் போராடும் உங்களை போன்ற நல்ல உள்ளம் படைத்த நடுநிலையாளர்கள் எம் தமிழ் இனத்தின் கடைசி சொட்டு இரத்தங்கள்,… நன்றி.
கணே.குமாரவேல்.
ஹைதராபாத்.
ஞாநி அவர்களுக்கு , என் பெயர் திருஞானசம்பந்தம் ,
நான் முதலில் உங்களின் “கண்டதை சொல்கிறேன் ” ஐ தான் முதலில் படிக்க தொடங்கினேன். அதற்க்கு வெகு நாள் கழித்து தான் உங்கள் படம் பார்க்க கிடைத்தது. அனால் , பாரதியின் முண்டாசும் மீசையும் கொண்ட உருவத்தை கற்பனை செய்து வைத்திருந்தேன் . இவ்வளவு நாள் கழித்து இணையம் செல்ல கற்று கொண்ட பிறகுதான் இதை சொல்ல முடிந்தது .
ஒரே ஒரு வேண்டுகோள் , உங்கள் முன்மாதிரிகளில் காந்தியை மட்டும் பரிசீலனை செய்யவும் . எப்படி கூடி கழித்து பார்த்தாலும் அவர் ஒரு ராஜதந்திரியாக மட்டுமே எனக்குப் படுகிறார் . எனது கணக்கு (4 * காந்தி =கருணாநிதி). தவறாக இருந்தால் பொறுக்கவும் , திருத்தவும் (ஆதாரங்களுடன் ). உங்கள் பத்தியை நிறுத்திய போதெல்லாம் அந்த பத்திரிக்கைகள் (ஆ.வி,குமுதம் ) ஒரு தொடர் வாசகனை (நான்) இழந்தன என்பதை உங்கள் மூலம் அவைகளுக்கு தெரிவிக்க விரும்புகிறேன் ……
என் கிராமத்துக்கு அருகாமையிலிருக்கும் தம்பி ஒரு முறை உங்கள் இல்லத்துக்கு அழைத்து வந்திருக்கிறார் 80 களின் இறுதி என நினைக்கிறேன்…உங்கள் குழந்தையின் கிறுக்கலுக்காக வீட்டி ஒரு சுவர் ஒதுக்கியிருந்தது இன்னமும் நினைவிலிருந்து நீங்காமலிருக்கிறது
Dear Sir,
I see your honesty in your words. We need a person like you for the society, most of us can not read and remember lot of things and a person like you give everything as capsule. you are a social Dr. a lot of changes possible now through the internet, you will not face problems like what you were going through all these days. please continue………
Dear Ganani,
Happy to know that you arefrom
Changalpattu, since that is my home town also.
Your O pakagal is simply eye opening for many people.
I am not happy that you are an aethist, you fail to understand that God is everywhere, and most of us miss to see it.
Nearly after an year, I logged into your site and my eyes immediatley read your autobiography only…
your are good man, with selfless attitude towards material things
lot more things to say and talk, to you..
however i will stay in touch..
can i have you opinion about the Samacher Kalvi.? I believe it is good thoughtful project, now bined
Thanks
Ram
Manchester-UK
உங்கள் பின்னால் இளைஞர் படை இருக்கிறது.உங்களை பின்பற்றுகிறார்கள்.இன்னும் எழுதி மட்டும் கொண்டு இருக்க போகிறீர்களா? ஏன் எல்லா ரையும் ஒன்றினைக்க கூடாது?என்ன சொல்ல போகிறீர்கள்?விடைகழுக்காக காத்து இருக்கிறது நாளய இந்தியாவின் பெரும்பான்மை சமூகம் நான் உட்பட…
கேள்விகளுடன்,
வினேஷ்
வலி தான் வெற்றியின் ரகசியம்… மிக அருமையான மனிதர் நீங்கள் உங்களின் ரசிகனாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்..
மதிப்பிற்குரிய ஞானி அவர்களுக்கு வணக்கம், மீண்டும் தங்களை வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். தீம்தரிகிட சந்தாதாரர்களில் நானும் ஒருவன், தொடரட்டும் தங்கள் பணி, நன்றியுடன். பிரகாஷ்.
அண்ணா…வணக்கம். நான் தங்கள் வலைத்தளத்தில் நுழைந்தவுடன் முதலில் படித்த கட்டுரையே தங்களைப் பற்றியதான இதைத்தான். உங்களைப் புரிந்து கொள்வதற்க்கு இது உதவும். இதுமுதல் உங்களைப் பின் தொடர்கிறேன். கருத்துக்களைப் பகிந்து கொள்கிறேன். நன்றி.
வீரா
ஈரோடு.
08 .05 .2011
உங்கள் வாழ்கையில் நீங்கள் செய்துள்ள இந்த அறிய பெரிய விசயங்களை பர்ர்த்து நான் உண்மையில் பெருமை அடைகிறேன். பத்திரிகை துறை உங்களை என்றும் மறவாது என்னுடைய வாழ்த்துக்கள் என்றும் உங்களுக்கு இருக்கும் என்றும் அன்புடன்.
ஜெய்.
ஞான பானு & நேயம்?
ஞாநி பதில் : ஆம். நேயம் என் மறைந்த நண்பர் வீரபாண்டியனின் நிறுவனம். என்னுடன் இணைந்து ‘பிக்னிக்’ தொலைக்காட்சி தொடர் தயாரித்தபின்னர் அவர் சென்னை வானொலியில் பண்பலை வரிசையில் தனியார் ஒலிபரப்பு நேரத்தில் ஸ்லாட் எடுத்து ஒலிபரப்பு செய்துகொண்டிருந்தார்.
திரு ஞானி அவர்களுக்கு, என் பணிவான வணக்கங்கள்
தங்கள் எழுத்துக்களால் தெளிவும் சமூக அறிவும் பெற்ற பல இளைன்ஞர்களில் நானும் ஒருவன். தங்களின் சமூக அக்கறைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
தொடரும் தங்கள் பணியில் தங்களுடன்
அன்புடனும் பணிவுடனும்
ராஜன்
நீங்கள் எனது ஆதர்ச நாயகன்
உங்களைப்பற்றி நீங்கள் எழுதி இருப்பது, உங்கள் கட்டுரைகளை போலவே ஆணி அடித்தாற்போல் உள்ளது
அன்புள்ள ஞானி அவர்களுக்கு,
நான் உங்களை காண போய்கிறேன் என்பதில் மிகவும் மகிழ்ச்சி படுகிறான் …
இப்படிக்கு,
அன்பரே வணக்கம்.. தங்களைப்போல் எதாவது ஒருவிதத்தில் நான் பிறந்த இந்த சமுதாயத்திற்கு என்னாலான நல்லவற்றை செய்ய துடிக்கும் ஒரு இளைஞன்… என்னைப் பொறுத்த வரை இன்னும் மன / கல்வி முதிர்ச்சி பெறாதவரை நம் மக்கள் ஏமாளிகலாகத்தான் இருப்பார்கள். எந்த ஒரு ஆட்சியும் கடை நிலை மக்களின் கல்வியறிவை உயர்த்த மாட்டார்கள்.நம்மை போன்ற சமுதாய நல்விரும்பிகளால் மட்டுமே எதாவது செய்ய முடியும். அரசியல்வாதியை சாடுவதையும் அவர்களை அகற்றுவதையும் பண்பட்ட பிறகு நம் மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.
அன்பார்ந்த ஞானி அவர்களுக்கு ,வணக்கம்.முகவர்கள் ஏமாற்றியதால் என இருமுறைக்கு மேல் குறிப்பிட்டுள் ளிர்கள்…முதலில் தன் தவறினைப் பிறர் மீது திணிப்பது தவறு என்பதும் ஒருவன் உன்னை இருமுறை ஏமாற்றினால் அது உன் தவறு என்பதும் எல்லாம் தெரிந்த ஞானிக்குத் தெரியாதா என்ன ?…(தங்களைப் புண் படுத்த இதை குறிப்பிடவில்லை …ஆனாலும் உறுத்தியதை சொல்லாமல் விட மனமில்லை ..)என்றும் அன்புடன் ஜெயக்குமார்
ஞாநி பதில்: வெவ்வேறு காலகட்டங்களில் பத்திரிகை நடத்த முயற்சித்தோம். வெவ்வேறு முகவர்கள் தவறு செய்தார்கள். அதைப் பதிவு செய்திருக்கிறேன்.போதுமான நிதி முதலீடு நம்மிடம் இல்லாததுதான் பிரச்சினை. விக்டன், குமுதம் உள்ளிட்ட பெரும் பத்திரிகைகளுக்குக் கூட bad debt என்ற பிரச்சினை உள்ளது. அவர்களுக்கு முதலீடு பெரிதாக் உள்ளதால் தாக்கு பிடிக்க முடியும். நம்மால் முடியாது என்பதே சிக்கல்.
நன்றாக சமாளித்திருக்கிறீர்கள் (பதில் )….என்றுதான் சொல்ல வேண்டும் வேறு என்ன செய்ய ?எவ்வளவு இருந்தும் தங்களால் தங்களின் சிறு தவறுகளைக் கூட ஏற்றுக்கொள்ள மனமில்லை போலும் …அதுசரி இப்படியாகத்தான் சமுகத்தில் பல்வேறு தரப்பினரும் தங்களை ஞாயப் படுத்தும் மனோபாவத்தோடுதான் வாழ்கிறரர்கள் …மீண்டும் சொல்கிறேன் தங்களை புண்படுத்த விரும்பவில்லை …ஆனாலும் உண்மை இதுதான்
ஞாநி பதில்: முகவர்கள் ஏமாற்றியதில் என் தவறு என்று எதுவும் இல்லை; பொருளாதார பலம் இல்லாமல் சொந்தமாகப் பத்திரிகை நடத்த முயன்று பெரும் வாசக்ர் ஆதரவு இருந்தும் தோற்ற்றதற்கான காரனங்களை சொல்லும்போதே அதைக் குறிப்பிடுகிறேன். அவ்வளவுதான்.என்னிடம் தவறு கண்டுபிடித்துத்தான் ஆக வேண்டும் என்று நீங்கள் பிடிவாதமாக இருந்தால் அது உங்கள் பிரச்சினை. எனக்கு அது ஒரு பொருட்டல்ல. என் மனசாட்சிக்கு நான் நேர்மையாகவே இருக்கிறேன். இருப்பேன். அதை ஏற்பதும் மறுப்பதும் உங்கள் விருப்பம். அசல் பிரச்சினைகளை விட்டுவிட்டு இத்தகைய விவாதங்கள் திசைமாறுவது எனக்கு உடன்பாடில்லை. இந்த விவாதம் இத்துடன் முடிக்கப்படுகிறது.
குற்றம் கண்டுபிடிப்பதல்ல எனது நோக்கம் …தங்களது கருத்து இளையதலைமுறைக்கு தவறான முன்னுதாரனமாகிவிடக் கூடாது என்பதே எனது நோக்கம் ஒன்று நீங்கள் முகவரைத் தண்டித்திருக்க வேண்டும் …அல்லது மன்னித்திருக்க வேண்டும் …மன்னித்திருந்தால் அதை இங்கு குறிப்பிடக் கூடாது …இன்னும் பொறுப்பை வேறு தட்டிக் கழிக்கிறீர்கள் ….ம்ம்ம் …சரி…முடிந்தால் இன்னொரு முறை திறந்த மனதோடு பாருங்கள் …மற்றபடி உங்கள் மீதும் உங்கள் உடல் நலத்தின் மீதும் எப்போதும் அக்கறை கொண்ட ஒரு நலம் விரும்பி..
ஞாநி பதில்: தவறு செய்த முகவர்களை தண்டித்தோம். இரு முறை தீம்தரிகிட இதழ்களில் பாக்கி வைத்திருக்கும் முகவர்கள் பட்டியலை வெளியிட்டு, மற்ற சிறு முதலீட்டு பத்திரிகையாளர்களுக்கும் வாசகர்களுக்கும் தெரியப்படுத்தினோம். அதுதான் நான் அளிக்கக்கூடிய தண்டனையாக இருந்தது.
அன்புள்ள ஞானி அவர்களுக்கு ,கலங்கிய கண்களுடன் (ஆனால் பரிதாப உணர்ச்சியின்றி ) நான் எழுதுவது ….எளிமையும் ,உண்மையும் என்றென்றும் வலிமையானது …still honesty is the best policy…நான் உங்களைப் போலவே ஒத்த சிந்தனையாளன் …தயவு செய்து என் தளம் சென்று கருத்திடுக …நேரில் சந்திக்க ஆவல் …www.kmr-wellwishers.blogspot.com நன்றி ….
திரு ஞாநி அவர்களுக்கு
உங்களை ஆனந்த விகடன் “ஓ பக்கங்கள்” மூலமாக அறிவேன். தொடர்ந்து உங்கள் பதிவுகள் எங்கெங்கு கிடைக்கிறதோ அவற்றையெல்லாம் வாசித்து வருகிறேன். உங்களின் சமூக நலம் சார்ந்த கருத்துக்களும் கோபங்களும் எனக்கும் உண்டு. எத்தகைய சூழலிலும் தொடர்ந்து உங்கள் கருத்துகளை அஞ்சாமல் முன்வைக்கும் உங்கள் எழுத்துப்பணி தொடர வேண்டும். உங்கள் எழுத்துக்கள் ஒரு நல்ல ஊழலற்ற நேர்மையான சமூகம் உருவாக முதல் படியாக அமையும்.
தொடர்ந்து எழுதுங்கள்.
-மணி
போர் முனை சிப்பாய்களுக்கு உத்தரவிடும் குரலுக்கு சொந்தக்காரர் ..
புரட்சி எண்ணங்களை இளைஞர் மனதில் செலுத்தும் ஆணி வேர் ..
எங்களுக்கு மரபையும் , நவீனத்தையும் எப்போதும் புகட்டும் உங்கள் குணம் ..
எளிமை எலைட் , பிரீமியம் போன்று ஒரு வர்க்கமாய் இருபது அல்ல ..
இயல்பாய் இருப்பது , அன்பாய் இருப்பது என்பதை எப்போதும் காட்டும் உங்கள் மனம் …
ஆரோக்கியமான உடல் , மன நலம் , உங்களுக்கு எப்போதும் அமைய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..
ஞானி சார் ..
பிரியமுடன்
சக்கரவர்த்தி
உங்களை நான் தலை வணங்குஹீரன்
இது உங்களோட குட்டி ஆட்டோ biography மாதிரி இருக்கு, உங்கள் வீறு கொண்ட, சத்து மிக்க வரிகளுக்கு என்றும் படிப்பாளிகள் உற்ற துணையாக இருப்பார்கள். வாழ்த்துக்கள்
அன்புள்ள திருவாளர் ஞாநி அவர்களுக்கு,
தங்களின் நேர்மையான விமர்சனங்களை வியந்து பார்க்கும்
வாசகனின் வாழ்த்துக்கள்.
நீங்கள் ஆ.வி.இருந்து வெளியே(ற்)றிய போது சொன்ன வாடகைவீடு, குடியமர்ததல் கதை சூப்பரோ சூப்பர். இன்னும், இன்றும் நினைத்து சிலிர்க்கும் சில அருமையான உவமை அது.
உங்களை தீம்தரிகிட புத்தக கண்காட்சியிலும், கிழக்குபதிப்பக மொட்டைமாடி கூட்டங்களிலும் பார்த்திருக்கிறேன்.
பணி தொடர வாழ்த்துக்கள் …
அன்புடன்
சரவணக்குமார்
பொறிஞர் (உலோகவியல்)
அண்ணா,
’வறுமையில் செம்மை’ என்பது என் அம்மா எனக்கு வாழ்ந்து காட்டியது. உங்கள் கட்டுரையில் அந்தக்குறிப்பைக் கண்டதும் நெகிழ்ச்சியுற்றேன். உங்களுடன் பல கோணங்களில் முரண்பட்டே இருப்பினும், உங்களின் உளத்திண்மைக்கும், நேர்மைக்கும் என் வணக்கங்கள். பங்காரு அம்மாவின் ஆசி என்றும் உங்களுக்கு உடனிருக்கும்.
சற்றும் பொய் இல்லாத நேர்மையான பதிவு சாட்சியமாக நானிருக்கிறேன்..துரை
I heard that you have waited couple hours to see Raul Vinci aka Rahul.
Is that true?
அனந்த விகடனின் ஒ பக்கங்கள் மூலம் உங்கள் ரசிகனான நான் தினமணிக்கதிர் ஆப்பிள் தேசம் மூலம் படித்து வந்தேன். மீண்டும் உங்கள் எழுத்துகள் எல்லாவற்றையும் ஒரே இடத்தில படிக்க முடிவதில் மகிழ்ச்சி
உங்கள் ஒ பக்கத்தின் தீவிர வாசகன் நானும் என் நண்பர்களும். பாமரர்களுக்கும் உங்கள் எழுத்து சென்றடைய தொலை காட்சி போன்ற வேறு சில ஊடகங்களும் உதவி செய்யும். நீங்கள் இதை கட்டாயம் யோசித்து இருப்பீர்கள் என அறிவோம். இருந்தாலும் கூற விரும்பினோம். உங்கள் கருத்து அனைவரையும் சென்றடைய வேண்டிய முக்கியமான் ஒன்று.
ஒ பக்கங்கள் இல் இருந்து தான் எனக்கு உங்களை தெரியும். யார் இந்த ஞானி. எழுத்து நடை அழகாக இருக்கிறது. அதில் கோபமும், உண்மையும் தெறிக்குது.
தங்கள் வாழ்க்கை பாதையில் நடை பெற்ற ஒவ்வொரு தொழில் விலகல் இன் போதும் தாங்கள் அதற்கான காரணத்தை சொல்ல விரும்பாததின் காரணம் என்ன?
உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும்போதெல்லாம், நானும் என் நண்பர்களும் உங்கள் எழுத்துகளையே நாடுகிறோம்…நீங்கள் ஞானி மட்டும் அல்ல , நக்கீரனும் தான்.
அன்புள்ள ஞானிக்கு
வணக்கம் பாரதிக்கு வாழ்கை மாதிரி இருக்கு
அன்புடன்
நந்தா
திரு. ஞானி அவர்களே!, உங்களை வெகு சில வருடங்களாக, படித்திருக்கிறேன். உங்களின் வெளிப்படியான கருத்துக்களைக்கொண்டு, என்னை போல் வாசகர்களை பெற்றுருக்கிறீர்கள். உங்களின் இந்த வலைப்பணி தொடர
என் வாழ்த்துக்கள்!!!!.
after reading this i belive that i havent dont anyting in my life…….
சார் உங்க வலை தளம் கண்டு கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். . .
” அர்த்தமுள்ள வாழ்க்கை” வாழ்ந்த களிப்பை பார்கிறேன்
வுங்கள் வாழ்க்கையில், பாரதியின் வாழ்வை ஒத்து வுள்ளது
வுங்கள் வாழ்க்கை. பொறாமையாக இருக்கிறது.
நன்று… நன்று…
Inspriational………
sir I am proud to be in your website.i am reading ur \’o\’ pakkangal. since from kumudam magazine. Your the one & only bold and brave writer i have seen. i will give u great BOUQUET (POOCHAND) for ur writings I like ur writings against the ruling goverment, its not at all easy, keep going. a great great great SALUTE to uuu….
ஒரு எழுதாலனின் வீரம் முக்கியம் ,அது பேனா காகிதத்தைவிட மிகவும் முக்கியம்;அதை கொன்டே நீவிர் இந்த உச்சதை அடைந்துல்லீர்.உமக்கு எனது வாழ்துக்கல்.
நண்பா வணக்கம் சகல கலை வடிவங்கள் மீதும் தீராத காதல் கொண்ட பலருக்கும் ஏற்பட்ட அனுபவங்களே
உங்களுக்கும் ஏற்பட்டுள்ளது, துன்பங்களை மீறியும் அந்த காதல் படுத்தும் பாடே உமது சுயசரிதை
இன்றுதான் உங்கள் வெப்சைட்டுக்கு வரும் வாய்ப்பு கிடைத்தது. முக்கியமான வாழ்க்கை நிகழ்வுகளை பகிர்ந்துகொண்டிருப்பது உங்கள் நேர்மையை ப்ரதிபலிப்பதாக உள்ளது. ஆரம்ப காலத்தில் கலைஞரின் தி.மு.க. விற்கு பிரசாரம் செய்திருக்கிறீர்கள் என்பதும், ஆர்காட்டாரின் பேப்பரில் வேலை செய்திருக்கிறீர்கள் என்பதும் எனக்கு ஆச்சர்யமான செய்திகள். நீங்களும் சுஜாதா மாதிரி ஒரு நிரந்தர வேலையிலிருந்துகொண்டு எழுத்துப் பணியில் இருந்திருந்தால் ஒரு வேளை சில விரும்பத்தகாத விஷயங்கள் நடந்திருக்காதோ என்னவோ. ஆனால், நீங்கள் சுஜாதாவை விட ஆத்மார்த்தமான கலைஞர் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. உங்களுக்கு வாழ்த்துக்கள். – ஜெகன்னாதன்
நான் யார் என்ற பகுது முழுவதும் படித்தேன். தன்களுக்கு க்னனி என்ற பெயர் எப்பொது வழங்கப்பட்டது என்று தெரிவிக்கவில்லை.
Hats off to your writings and speeches sir.Keep Rocking !!!
எல்லாம் சரி…நீங்கள் M20 ஆ இல்லை M17 ஆ?
After Bharathi you are the boldest writer in our Tamil world. I am very proud of you. Keep it up.You are our energy and role model.
Regards
Krish, Kolkata
the longest journey begins with single step
நானும் உங்கள் வாசகர்களில் ஒருவன்.
பெருமையுடன்,
செந்தில்
தமிழ் வாசகன்
pl tell us about your corageous life after october 2008.
madurairadha.
Gnani.. I have come with a lifetime message to you..
please do learn and know about \”THE VENUS PROJECT\”
NOTE: VERY IMPORTANT
அன்பு சகோதரர் நானிக்கு என் வாழ்த்துக்கல்
திரு ஞாநி அவர்கலெ,
என் பெயர் மஹெஷ்,னான் உஙலுடய தேவிர ரசிகன்,
உஙலுடுய யெலுதுகள்,கருதுகல்,எனக்கு மிகவும் பிடிக்கும்..
முக்கியமாக தஙலது கருட்துகல் என்னை மிகவும் பாதிதது. ந்ஏஙல் இது பொஅன்ட்ர சமுதாய கரிதுகலை மஎலும் யெடுதுரைக்க இந்த ரசிகனின் வால்துகல்.
Fantastic sir., i am really proud of you..
vanakkam gnani,
ungal udambu eppidi ullathu.ungalidam neraya pesa asai, ungalai neril santhika asaipadum palaril nanum oruvan, ungaloda valai pakkathai partha vudan rombavum makilnthen,thangal ippodu eluthi varum kumudam puthagathai ungal pakkathairkaga matum than vanga vendi irukirathu.
ungal eluthu moolam than nan 49\’O patri puriyum padiyaga therinthu konden.ithu samandamaga nengal election commissionakum/ supreme court nithi pathikum letter eautha sonna pothu nan matum seiammal enaku therinthavarkum ithai patri solli avargalaiyum anapa seithen.
Nengal vara varam tharum thitu/poo chendu pola en ponra onum ariyatharvargaluku, padipatharkana silla puthagathai varandhorum parindurai sei vendi ketu kolgiren.
ungal bariksha kuzhuvinarkum, ungal udal nallamillatha pothu ungaludan irundu kavanithukonda ungal makanukum en vazthukal.
Ragavendran.
என்ன தான் உங்களின் கருத்துகள் பரபரப்பையும் கோபத்தையும் உண்டாக்கினாலும்.,வீண் விளம்பரத்திர்க்காக நீங்கள் எழுதுவதாகவே சில நேரங்களில் தோன்றுகின்றது…
Ayya Vanakkam
Thangalin thunivirkkum, manathil thondriyathai sollum thayakkamillatha thairiyathirkkum Parattukkal.
Munbu Anantha vikadanilum sari, ippothu kumudhaththilum sari naan muthalil purattum pakkangal thangalin \’O Pakkanal\’ than. Thangali vasagan enbathil perumai ullavan.
Thani manitha – adhuvum saga ezuthalargal allathu nanbargal udanana – thodarchiyana vaakuvathangal matrum avargalukkana thodar padhil kadithangal pondravatrai mattum thavirthal nandra irukkum enbathu enathu thanippatta karuthu (avaigal thangalin nadunilamai patriya pirazh thotrathai yerpadhugindrana).
Thangalin karuthukkalin rasigan naan. Thangalin samuthaya ezhuthu panikku vazhthukkal.
Mr.Gnani,
This is siva here. I always have a good opinion and respect on you. And one of my friends (Mr.Muthupandi) said my thoughts are as similar as Mr.Gnani. I hate to support our politicians by voting them as you feel. By the same time i read \”O Podu\” written by you. I really felt very happy to have read which you had written about many things. I always thankful to your valuable opinions which will help our society to be aware of the contemporary politics. Thanks forever.
அன்புள்ள திருவாளர் ஞாநி அவர்களுக்கு,
தங்களின் நேர்மையான விமர்சனங்களை வியந்து பார்க்கும்
வாசகனின் வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் உங்கள் எழுத்திற்கும் மிக்க நன்றி.
தங்களின் நேர்மையான பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்.
ப.முருகன்
தென்னக இரயில்வே.
தமிழ் நாட்டில் நேர்மையாக இருப்பது ,மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் நடப்பது ,பலம் பொருந்திய மனிதர்களின் தவறுகளை பயம் இல்லாமல் சுட்டி காட்டுவது போன்றவை முடியாது என்று நினைத்திருந்தேன் .ஆனால் உங்களை போன்றவர்கள் அது முடியும் என்று நம்பிக்கை அளிக்கின்றீர் ..நன்றி ..
மதிப்பிற்குரிய ஞானி அவர்களுக்கு அன்புவனக்கங்களுடன் அருள்பாலன் தாங்கள் நலமா தங்களின் நலம் குறித்து அறிய விரும்புகிறேன்
என்றும் பகுத்தறிவை விரும்பும்
அருள் பாலன்
அன்புள்ள ஞாநி அவர்களுக்கு,
வணக்கம்
என் பெயர் ராகவன். சேலம் வாசியான நான் தற்போது ஐதராபாத்தில் பணியாற்றுகிறேன். தங்களின் ரசிகன் என்று சொல்லிக்கொள்வதில் மிகவும் பெருமையடைகிறேன். யாருடைய கட்டாயத்திற்கும் உட்படாமல் என் வாழ்க்கையை எனக்காக வாழ்கிறேன். நீங்கள் உங்களைப்பற்றி சொன்னதைப்போல, \”நான் எப்போதும் இந்த சமூகத்தின் மனசாட்சியாக செயல்படவே முயற்சி செய்து வந்திருக்கிறேன். தனிப்பட்ட முறையில் என்னால் பிறருக்கும் பிறரால் எனக்கும் வலிகளின்றி, ஒரு நேர்மையான, எளிமையான வாழ்க்கையை வாழும் முயற்சியைத் தொடர்ந்து மேற்கொண்டிருக்கிறேன்.\”
ஆனால் என் பெற்றோரும் உறவினர்களும் என்னை புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்கு என்னை புரிந்து கொள்ள நான் மேற்கோள் காட்டுவது உங்களைத்தான். கடவுளையும் – விஞ்ஞானத்தையும் குழப்பிக்கொள்கின்றனர்.
என் வீட்டில் அனைவரும் மிகுந்த கடவுள் பக்தி கொன்டவர்.
எனக்கு துளியும் இல்லை.என் கருத்துக்களை அவர்கள் கேட்பதும் இல்லை, மதிப்பதும் இல்லை. அது போன்ற பல சமயங்களில், நான் சரி இல்லையோ என்று கூட தோன்றியது உண்டு.ஆனால் தங்களின் படைப்புகளை படித்த பின், என்னை பற்றி எனக்கே மிகவும் பெருமையாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் உங்களின் தீவிர ரசிகனாகிவிட்டேன். குறிப்பாக ஓ பக்கங்கள், அறிந்தும் அறியாமலும், போன்றவை.
தயவு செய்து அறிந்தும் அறியாமலும் பகுதியை மீண்டும் நீங்கள் தொடர வேண்டும். மேலும் நீங்கள் எழுதிய மற்ற புத்தகங்கள் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கள்.
கடந்த ஞாயிரன்று விஜய் டி.வி யில் நீயா நானா\’வில் மிக மிக அற்புதமாக உங்கள் கருத்துக்களை கூறினீர்கள். எதிலும் என் கருத்துகளை விரும்பாத என் தந்தை அன்று 11 மணி வரை என்னுடன் சேர்ந்து பார்த்தார்.
உங்கள் எழுத்துகளின் மூலம் என் கருத்துகளை மிகவும் எளிமையாக மற்றவர்களுக்கு என்னால் புரிய வைக்க முடிகிறது. உங்கள் பணி மேலும் தொடர என் விருப்பங்களும் வாழ்த்துக்களும்.. மிக்க நன்றி ஐயா.
உங்களுக்கும் உங்கள் எழுத்திற்கும்.
என்றும் அன்புடன்,
ராகவன்.
–தீதும் நன்றும் பிறர் தர வாரா–
Hi Sir,
When I met you today (@Krishna Sweets), I was not able to collate all my thoughts and express why I said \”hi\” to you.
I have always liked your honesty and which made me to come out of the shell and break my shyness.
I urge you to keep on writing (with HONESTY).
Vijay
மதிர்பிர்குரிய ஐயா ஞாநி அவர்கலுக்கு அன்பு வனக்கஙலுடன் அருள் பாலன் இதுவரை தங்களின் பல நிகழ்ச்சிகளுக்கு வந்து கலந்துகொள்ள ஆசை பட்டேன் ஆனால் என்னால் முடியவில்லை நேற்று (ஏப்ரல் 4 இரவு ) விஜய் டிவி யில் நடந்த நீயா நானா நிகழ்ச்சியில் தாங்கள் பேசிய விதம் (ஒரு பெண் உங்கள் காலில் விழும் போது தாங்கள் கூறிய சொல் மனிதன் காலில் மனிதனே விழ கூடாது என்ற சொல் )எனக்கு மிகவும் பிடித்தது இனியும் தங்களின் நிகழ்ச்சிகளை காண தவர விரும்பவில்லை எனவே தங்களின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் தெரியும் முறையை தெரிய படுத்தவும் மேலும் இன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நீயா நானா குழு (கோபிநாத் ) அனைவருக்கும் தங்களின் மூலமாக எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
என்றும் பகுத்தறிவை விரும்பும்
அருள் பாலன்
The following comments are my own and if it hurts you please ignore them. Its intentions are not that. While I am ignorant about you and your antecedents, I thought I should write this comment because of what I happened to see over a couple of minutes while I was standing at a particular spot in our house.
——
Dear Sri Gnani (so called, may be we should add the letter capital \”a\” before your name),
I happen to see a programme in Vijay TV in Bahrain while I was passing by a TV today. I have stopped seeing TV since a few years as in my opinion it serves no purpose except wasting your time. In the couple of minutes I could hear some words spoken by you accidentally I was rather dissapointed with your words. I then came to this site using Google as I was keen to inform you how desparate you are. I do not know who you are till date. From the centre stage occupied by you in that programme and the frequent address made to a person by the anchor with the word \”Gnani\” in those two minutes, I presumed you should be the person he is referring to.
From the LENGTHY introduction given by you in this website, I understand you have some activities related to writing, theatre,movies and politics. It conveys only one thing. That is, you know how to write tamil. Other than that the introduction lacks meaning. Your words in Vijay TV \”manithan manithanai vanaga thevai illai. Nan enadu petrogalai vanagiathu illai\” conveys that you are more interested in looking at one mound of flesh prostrating in fornt of anoher mound of flesh. The concept of \”vanakkam\” does not bother about physical flesh. It seeks the virtue of an elderly person as a concept. It is abstract. If you think you have attained great virtue, that too by yourself and you don\’t have to prostrate, a lengthy introduction about you is a waste as a simple concept is beyond your comprehension. We don\’t need such long introduction about a person who is meaningul. What purpose it serves me or for that matter anyone, to know aobut you? What are you after all? Your vision is very very narrow and perhaps exactly fits into your limited vision of gaining contemporary acclaim and not permanent acclaim beyond times. The word \”Gnani\” even the wisest men or women hesitate to use. You are an ordinary mortal with no meaningful purpose of existence and call yourself \”Gnani\”. Amazing is this world. Yes. You are an excellent example to indicate how temporary is this life and how people waste their energy in thinking they have measured the depth of this universe. Pity. You forgot that you are just an amalgamation of two cells. At the end you are not even that. \”Mudi sarnda mannanum mudivil pidi sambal\”. What are trying to convey which is new? Even today flora and fauna are teaching us lessons everyday without making any noise. It is the so called intelligent man who does not know and learn. Especially the people of the 21st Century. Your noise perhaps is louder than the most dreadful noise I have heard in life. \”Annayum Pithaum Munnari Theiyam\” is a simple and well written verse that has withstood the test time. Volumes of essays and poetry you may write, are ordinary dirt in front this statement. This is a simple, powerful and eternal statement. By seeking the virtue of elders through a very ordinary act of prostration, a tradition followed over thousands of years in our illustrious country, by wise people, one gets benefited without their notice. From your perspective this tradition is foolish practiced by millions of foolish people over thousands of years. Great!! Asirvathms serve the best of purposes on earth, which cannot be compared with any of the most tangible temporary acts. Yes there is no tangible proof for this. However what is the tangible proof we can show for all our short sighted and self assumed wisdoms, as yielding results? Are your writings going to be eternal? What worth they are? Please don\’t forget there are more than 600 crores of people on earth and each brain is more superior to yours in comparison. I wish you best of luck in your endeavour of self assumed director of directionless people or so you assume. I was forced to write this short comment in order to register my protest on your concept which you propagated without being asked for. This shows that you are immature. Please don\’t forget, the Sun dazzles without making noise. It is impossible to live without the Sun but you chose make noise. Let us learn simple truths instead of writing volumes of rubbish and propagating individual wisdoms of doom. Your parents have lived and gone. It is you now who is living the pain of living. Your prostration or otherwise does not make any difference to them. It could have for you and you missed the chance. Yes, your concept is wrong and meaningless.
Vazhtukkal
Addiyen
S. Gowrishankar
Bahrain
வணக்கம்.
தங்கள் சமுதாயப் பணி தொடர்ந்து சிறக்க
வாழ்த்துக்கள். உடல் ஆரோக்கியத்தையும்,ஆஞ்சியோ
இதயத்தையும் நன்கு பராமரிக்குமாறு அன்புடனும்,
உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புள்ள,
கணேஷ்ஜி.
hi im a good friend of your mother and sister when we livfed at triplicane . i know gurumoorthy sir too . ur mother told that my son is a free lance writer and living at peters colony . we used to talk a lot . she is s .s slc sslc . it was difficult for me to log in . see u ie will write ti to u latter a lot .
வணக்கம் திரு.ஞாநி அவர்களே!
முதலில் தங்கள் நேர்மைக்கு தலை வணங்கி! தங்களை நான்\’ஓ\’ பக்கங்களிலிருந்து வாசித்து நெசித்து வருகிறேன்.தங்கள் சமுதாயப்பனி தொடர்ந்து சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
அன்புடன்
வாசகன்/விசிறி
இராமணாதன்
Sir,
Please Update Your article of Enn naan kalaignari verukkiren or Send the reply to my mailwhere it is.
Thanks & Regards,
S.Karthick
I always desire and pray to my reliable god to your health (Shemathkku)
Sir, Keep on writing with honesty.
Thanks
வணக்கம் ஞாநி அவர்களே
உங்களுடன் நேரடி தொடர்பு கிடைத்தது மகிழ்ச்சி…
DEAR SIR,
UNGAL LIFE PATRI PADITHAVUDAN,KANGALIL NEERTHAN VARUGIRATHU.MANATHU MIGAVUM BAARAMAAGA IRUKKIRATHU.YEN SIR NALLAVANGALUKKU MATTUM SOTHANAI?????????
PRIYAMUDAN,
VIJAYAKUMAR.
SIR,
I NEED YOUR E-MAIL ID FOR DIRECT CONTACT WITH YOU.
NAANGAL MANATHIL YENNA SOLLA NINAIKKIROMO,ATHAI NEENGAL THAIRIYAMAGA SOLKIREERGAL.YENGALAL SOLLA MUDUYAVILLAI.KAARANAM-BAYAM.REALY YOU ARE GREAT SIR.
PRIYAMUDAN,
VIJAYKUMAR.
உங்களை மதிக்கிறேன்
Dear Gnani SIR,
You are a very brave person.
I admire people like you, Traffic Ramasamy, and others who without any political or other support single-handedly fight for justice. I also want to live like you people, but I have no guts. I fear a lot about the consequences that I have to face from the bad guys if I go against them. I hate myself for that ..and I pray god to give me courage and guts to fight for the right. I am a family man with 2 kids and no support. Maybe, after I finish off with all my responsibilities possibly 10-12 years from now, I can come out bravely and join you people. I am really sorry for the time being. May god give you more and more health, wealth and all the blessings so that you can carry on your courageous and righteous work.
Rathna Kumar. R
such a wonerfull and brave person you are !
ravi
ஞானி அவர்களே உங்களின் ஓ பக்கங்களை ”ஆவி”யில் படித்திருக்கிறேன். ஆனால் உங்களைப் பற்றி இவ்வளவு செய்திகளை அறிந்ததில்லை. உங்களின் கொள்கைப் பிடிப்பதை அறிந்து இந்த வலைதளத்திற்கு வந்ததற்கு பெருமை கொள்கிறேன்.
SIR,
FIRST TIME I MET THE WORLD REAL MAN(YOU)
ALLWAYS MY HELP IS AVAILABLE WITH YOU.
CONTINUE YOUR \’GOLD JOB\’…..
PRIYAMUDAN.,
VIJAYKUMAR
உல்லதை உல்லபடி சொன்னதர்கு வால்த்துக்கல்
௨
உண்மை சுடர் விட்டுப் பிரகாசிக்கிறது.
நீவிர் வாழ்க;நின் குலம் வாழ்க!
வணக்கம்.
பல ஆண்டுகளாக உங்களை கவனித்தும் வாசித்தும் வருபவன். சில ஆண்டுகளுக்கு முன் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டது உங்களுக்கு நினைவில் இருக்க வாய்ப்பில்லை. தில்லித் தமிழ்ச் சங்கத்தில் 4 ஏப்ரல் 2010 அன்று கலந்துரையாடலில் உங்களை நேரில் சந்திக்க ஆவலாக இருப்பவன். சந்திப்போம்.
புதியவன்
குறிப்பு – தமிழ் தட்டச்சு நன்கு அறிவேன். இருப்பினும் இங்கே தட்டச்சு செய்த பிறகு இடையில் திருத்தப் புகுந்தால் கடைசி வரிக்கு சுட்டி நகர்ந்து விடுகிறது. பிரச்சினை ஏதும் இருந்தால் சரி செய்தல் நலம்.
It is very rare to find a person like you on the earth. I feel very happy about your presence in my native state. Wish you all the best for continuing your dedicated service for sowing facts on minds of the people in our society. GOOD LUCK…
வாழ்த்துக்கள்
வணக்கம் ஞாநி அவர்களே
உங்களுடன் நேரடி தொடர்பு கிடைத்தது மகிழ்ச்சி
chandrasegaran
DEAR COMRADE,through this coloum I HAVE COME TO KNOW ABOUT YOU.I appriciate your consistant approach and actiontowards society.Wish you a healthy body to continue your journey.Best wishes. vaibasu.
திரு ஞானி அவர்களே உங்கள் பனி மென் மேலும் தொடர வாழ்துக்கள். வாழ்கையை ஒவ்வொரு மனிதனும் ஒரு கல்வியாக ஏற்று அதை கற்று தெளிவு பெற வேண்டும் என்பதை உங்களுடைய வாழ்நாள் அனுபவங்கள் உணர்த்தும். தங்களுடைய வாழ்நாள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
வாழ்த்துக்கள்
ITHU THAAN NEARMAI UNNMAI KADINAMAANA ULAIPPO!!
உங்களுடைய ரசிகன் நான். இந்த வலைப்பூவில் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன். ஒவ்வொரு முறையும் லாக் இன் செய்துதான் உள்ளே வரலாம் என்பது தேவையில்லாத வேலை. நான் கடவுச் சொற்களை அடிக்கடி மறந்துவிடுகின்றேன். எதற்கு இந்தக் கட்டுப்பாடு?எஙகள் அபிமான எழுத்தாளரைச் சந்திக்கத் தடை தேவையா?பிரபல எழுத்தாள்ர்க்ளின் வலைப்பூக்களைப் பார்க்க இந்தக்கட்டுப்பாடு இல்லையே!
பேராசிரியர் பட்டாபிராமன்
19- சி, பூங்கா நகர், வேலூர்- 632009
What is your views on yoga and meditation.
Regular reader of your article in vikatan and kumudam.(not able to type in tamil.Please write in tamil. I can understand.)
GREATER WRITER YOU ARE.
I am regularly reading your writings & I love your boldness.
மதிப்பிற்குரிய ஐயா
1971 தேர்தலில் காமராசருக்கு எதிராகப் பிரச்சாரரம் என்பது ஆச்சரியமளிக்கிறது.உங்கள் வாழ்க்கை அனுபவங்கள் நேர்மையாக வாழ்வது கடினமானது போராட்டமானது என்று உணர்த்துகிறது.
வணக்கம்.
உங்கள் எழுத்துக்கு என் வாழ்த்துக்கள்.
பொதுவாக சமூகத்தில் -திருமணம், குடும்ப வாழ்வு ஆகியவற்றின் தேவை பற்றி உங்கள் கருத்து
என்ன என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்..
I buy Kumudham book just to read your article. I am became your fan now. When I read my thought and feeling getting coincide with yours. I also would like to contribute something .. don\’t know what, how and when and where.
I don\’t want to just read you article during my coffee time and pass on. I am interested to do something. Please guide.
Regards,
-Ramprabhu
I buy Kumudham book just to read your article. I am became your fan now. When I read my thought and feeling getting coincide with yours. I also would like to contribute something .. don\’t know what, how and when and where.
I don\’t want to just read you article during my coffee time and pass on. I am interested to do something. Please guide.
Regards,
-Ramprabhu
Hi Gnai,
Your spirit will take you to greater heights. Please make a mainstream cinema, which will be hard hitting on the religious anti-social elements and make people conscious about their activities.
Regards,
kris.
thanks for ur auto-biography.
Dear Gnani
I am one of your admirers
I appreciate your efforts to create awareness
Will keep in touch
Regards
Saravanan
நான் உன்களின் தீவிர ரசிகன். உங்களின் வாயிலாக சமுதாயத்தில் நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் பல நெஞ்சு பொறுக்குதில்லையெ – க்களை தெரிந்துகொண்டிருக்கிறென். உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமா?
ஞாநி ஒரு போராளியாகவே வாழ்ந்து வருகிறார் என்பது மகிழ்ச்சிக்குரியது. இதழியல் வரலாற்றில் ஞாநியின் பக்கங்கள் இடம் பெறும். அப்போது எதிர்காலம் ஓ போடும்.
-முனைவர் தி.நெடுஞ்செழியன்
Dear Mr Gnani,
Even though I have been following your column through this media, only now I got to read about you.I am able to see the struggle all along your life.This is not new to people who want to be uncompromising.Past poverty always makes a status symbol. But, it should be only \”past\” and not present.
I have a friend who matches you in most of the things.He too tried his hands in Journalism, temporary employement in leading publications, a love affair followed by a succesful marriage et al.
But many a times his uncompromising attitude has landed him in troubles.It is okay to call a spade a spade. But sometimes we also make some mistakes( Compromises?).We tend to give up when some one close to us get hurt in the process of upholding certain principles. I too have faced several uphill situations in my life. But due to quirk of fate, some of my investments saved me from continuing my business which at one stage became impossible to run due to corruption at all levels.Even our own people need to be assuaged and there is no pointing to outsiders. There is some \”lie\” expected everywhere. being showing love or doing business.
But then,Thats what life is all about.
More later, I am unable to continue due to the same restraints I just mentioned. A group of immediate family is waiting to join them in their outing. So, bye for now.
regards and best wishes.
shankar
Carry on Mr.Gnani
IAM REALLY INSPIRED OF THE LIFE WHAT YOU LIVE TILL TODAY THE UNCOMPROMISED LIFE IN ANY CIRCUMSTANCES IS THE GREATEST CHALLANGE. BY READING IT IT I FELT NOTING IS THERE TO CONTOL US IN LIFE WE CAN CONTOL IT. GOOD SIR KEEP WRITING AND KEEP ON WRITING.. OUR SUPPORT WIL BE THERE WITH YOU..
KAKITHA NANAYA MURAYAI PATTRI VIVATHIPPOOMA
With so much of failures in life, you always put up a great effort to be a famous writer, public personality? more than that a great human? Gnani, I salute you with admiration. Keep writing, speaking. Place them in your net.
Thiyagarajan P
With so much of failures in life, you always put up a great effort to be a famous writer, public personality? more than that a great human? Gnani, I salute you with admiration. Keep writing, speaking. Place them in your net.
Thiyagarajan P
dear brother gnani,
well. i have been following you eversince our meeting at egmore museam stadium at balloon drama. In those days , you were staging nice satrical short plays cocerning peoples problems. you continue to be so. wishes \’
p.s i made a comment earkiear a few minutes ago. i do not know what happened? hence the seconfd one.
n.senapathy advocate erode-11
Dear brother gnani, well. i am a lawyer ,pratising in erode for the past 28 years. you might have forgotten me. i could not your play balloon at egmore museum hall. in those days your attempt at focussing through short plays were a grand success and every chennaite of my age could remember it . i follow you through media eversince . keep writing for the cause that you cherish.
N.SENAPATHY
ADVOCATE ERODE-11
p.s. I wanted to type this in tamil. Despite my best efforts, i could not type gnani. it came in different way. kindly post an article for tamil trasliteration typing in gnani.net
அன்பு க
அன்பு க
அன்பு க
அன்பு க
PLEASE DONT STOP MEETING US THRU NET. WRITE MORE AND MORE. I NEED UR MAIL ID.
ஆறிலிருந்து அறுபது வரை பட ஞாபகம் தான் வந்தது. உண்மையிலேயே எழுத்தை நம்பி குடும்பம் நடத்தினாலும் பல தளங்களிலும் நின்று தனியான ஒரு நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் உங்களுக்கு வாழ்த்து கூறுகிறேன்.
நட்புடன்
அ. லட்சுமணலால்
நுஙகல் கதை படிததும் நான் என் 24 வயதை வீனாகியது தெரிகின்ரது
திரு ஞானி அவர்களுக்கு
நன்றி உங்கள் நேர்மை
பாராட்டதக்கது .உண்மை என்றால் என்ன என்று கேட்க துடிக்கும் இந்த சமுதாயத்துக்கு ஒரு ஞானி அல்ல ஆயிரம் ஞானி தேவை. . என் பர்ரட்டுகள்
கிருஷ்ணமுர்த்தி